(Reading time: 1 minute)

கவிதை - நீயின்றி நானில்லை! - ரவை

உலகைப் பார்த்ததுமே

உரக்கநான் அழுவானேன்?

பலரின் கேள்வியிதை

பதிலளிக்க வேண்டாமா?

நிலமெனக்குப் பகையா?

நீரென்ன நெருப்பாச்சா?

மலரென்னை வெறுக்குமா?

முத்தம் கசக்குமா?

 

  

பின்னரேன் அழுதேன்?

பதில்தரவே விழைகிறேன்!

உன்னத தாயுந்தன்

உள்ளே உவகையுடன்

இன்னல் ஏதுமிலா

இந்திர லோகமதின்

வண்ண வாழ்விழந்த

வருத்தமே காரணமாம்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.