(Reading time: 1 - 2 minutes)

கவிதை - பரம்பொருளே - குணா

spiritual

இறைவா

உன் படைப்பினில் 
பேதமில்லையெனில் 
"தீண்டாமை" இன்னும் 
இருப்பது ஏனோ? 
உன் படைப்பில் 
"தீண்டாமை" இருப்பின் 
நீ யார் ?

உன் படைப்புகள் 
பொதுவானவை என்றால் 
"ஊனம் " ஏன் இன்றும் இருக்கிறது ? 
"ஊனம் " இருப்பின் 
அது உனக்கும் உண்டோ ?

ஏகாதிபத்தியக்காரர்களின் 
குளிரூட்டப்பட்ட தனி அறையில் தான் 
நீ இருக்கிறாய் என்றால் 
சுப்பனுக்கும் குப்பனுக்கும் 
குலதெய்வம் எதற்கு ?

பதில் சொல்வாயாக 
எம் பரம்பொருளே ! 
இப்பாமர மக்களுக்கு ...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.