கவிதை - திடீர் கடவுள் - குணா
கிணற்றின் பக்கவாட்டு சுவற்றில் நகர்ந்து கொண்டிருந்த எறும்பு
நிலை தடுமாறி உள்ளே விழும் போது
பச்சை நிற இலை ஒன்று
அதனை தன் மேல் ஏந்திக் கொண்டது...
எறும்போ தான் கடவுளின் கைகளில் பத்திரமாய் இருப்பதாய்
நினைத்து கொள்ள...
அந்த திடீர் கடவுள் உருவம்
அதன் கண்களுக்கு புலப்பட்டது..
காற்றிலே அசைந்து கொண்டிருந்த கிணற்றுக்கு அருகில் இருந்த
அந்த பெயர் தெரியா அல்லது
இன்னும் பெயர் வைக்கப்படாத
அந்த ஒற்றை மரம்...