கவிதை - நினைவு - விஜயலக்ஷ்மி
வீட்டிற்கு வந்த
உடன் தனிமை
என்னைச் சூழ்கிறது
நேரம் பார்த்து
உணவு கொடுக்கும்
அம்மா
முகம் சுருங்கினால்
உடம்பிற்கு ஏதோ என்று
பரிதவிக்கும் அம்மா
என் சந்தோஷமே
அவள் சந்தோஷமாக
பாவிக்கும் அம்மா
எனக்காக அப்பாவிடம்
சண்டைபோடும் அம்மா
ஆனால் இன்றோ
அவள் இல்லாமல்
பரிதவிக்கும் நான்