கவிதை - வீரம் - விஜயலக்ஷ்மி
ஆண்களுக்கு மட்டுமே
என யார் சொன்னது
இன்று அனேக
பெண்களின் சொத்து
உரசும் கயவர்களை
காலில் போட்டு மிதிப்போம்
கடும் சொற்களுக்கு தலை
தாழ்த்தாமல் தலை
நிமிர்ந்து போராடுவோம்
வாழ்க்கையின் ஒவ்வொரு
கட்டத்திலும் வெற்றியை
நோக்கி போராடுவோம்
இன்றைய காலக்கட்டத்தில்
பெண் குழந்தையாக இருந்தால் வீரத்தையும்
சேர்த்து தாய்ப்பாலில்
கொடுத்திடுவோம்