(Reading time: 1 - 2 minutes)

கவிதை - பெண்கள் - விஜயலக்ஷ்மி

woman

திருமணத்திற்கு முன்பு வரை சிட்டுக் குருவியாய்

பறந்து திரிந்தோம்

நம் ஆசைகளை நிறைவேற்ற காத்திருக்கும் தந்தை நம்மை ஆசை தீர

திட்டிக் கொண்டிருக்கும் அன்னை நம்முடன் சண்டை போட காத்திருக்கும் 

உடன்பிறப்புகள்

திருமணத்திற்கு பிறகு

நம் தனித்தன்மை எங்கோ

சென்று ஒளிந்து விடுகிறது

நம் ஆசைகளை கூட

நிறைவேற்றிக் கொள்ள

தயங்கும் நம் மனது

நாம் பிறருடன்‌‌ பேசும் 

நேரத்தை விட நம்

 மனதுடன் பேசும் 

நேரமே அதிகம்

நம் குடும்பத்தை கவனிப்பதிலேயே நம்

நேரமும் சென்று விடுகிறது

அதை உணரும் பொழுது

வயோதிகம் நம்மை

ஆட்கொண்டு விடுகிறது

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.