கவிதை - பெண்கள் - விஜயலக்ஷ்மி
திருமணத்திற்கு முன்பு வரை சிட்டுக் குருவியாய்
பறந்து திரிந்தோம்
நம் ஆசைகளை நிறைவேற்ற காத்திருக்கும் தந்தை நம்மை ஆசை தீர
திட்டிக் கொண்டிருக்கும் அன்னை நம்முடன் சண்டை போட காத்திருக்கும்
உடன்பிறப்புகள்
திருமணத்திற்கு பிறகு
நம் தனித்தன்மை எங்கோ
சென்று ஒளிந்து விடுகிறது
நம் ஆசைகளை கூட
நிறைவேற்றிக் கொள்ள
தயங்கும் நம் மனது
நாம் பிறருடன் பேசும்
நேரத்தை விட நம்
மனதுடன் பேசும்
நேரமே அதிகம்
நம் குடும்பத்தை கவனிப்பதிலேயே நம்
நேரமும் சென்று விடுகிறது
அதை உணரும் பொழுது
வயோதிகம் நம்மை
ஆட்கொண்டு விடுகிறது