கவிதை - குழந்தையும் விளையாட்டும் - விஜி P
மழைநீரில்
காகிதக் கப்பலை
மிதக்கவிட்டது குழந்தை மகிழ்ந்தன கப்பலும்
மழை நீரும்
மகிழ்ந்தார் கடவுள்
குழந்தையுடன்
விடுமுறை நாளில் விளையாடுவதற்கு
விளையாடும் பொம்மையை வைத்து விட்டு
பள்ளிக்கு புறப்பட்டது
குழந்தை
அழுதது பொம்மை
கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தார்கள் குடும்ப உறுப்பினர்கள்
குழந்தைகளின் விளையாட்டுலகில்..!!
{kunena_discuss:779}