கவிதை - துடிக்கும்... - கலைச்செல்வி அறிவழகன்
மெதுவாக துடிக்கும்
மெல்லிய இதயத்தின்
வலிமையான சுவர்களில்
என் சுவாசத்தினால்
எழுதினேன் உன் பெயரினை.
கனவுகளில் துளிர்க்கும்
நம் காதல் எண்ணங்களுக்கு
மறுபடியும் ஒளியேற்றிட
என்று நீ வருவாய்
என்னிடத்தில் என்னவளாய்?