கவிதை - தோள்களின் சுமை... - கலைச்செல்வி அறிவழகன்
கனவுகளின் சுமையினால்
சோர்ந்த என் கண் இமைகள்
பொங்கி எழுந்த
கண்ணீர் துளிகளுக்கு
தானாக வழிவிட
உப்பு கரித்த கன்னங்கள்
பாரமாய் நான் சுமந்திடும்
தோள்களின் சுமை உணர்த்திட
என் மனதின் ஆறாத வலியினால்
ஒவ்வொரு நிமிடமும் தவித்திருக்கும்
என் காலை நேர பொழுதுகள்
மாலை நேரத்திற்கு காத்திருக்கும்
உன் வரவினை நாடியே.