கவிதை - இன்னும் ஒரு முறை.... - கலைச்செல்வி அறிவழகன்
உன் சிரிப்பினில்
மலரும் பொழுதுகள்
எல்லோருக்கும் புரிவதில்லை.
உன்னை புரிந்து கொள்ள
இங்கே எவருக்கும் நேரமில்லை.
உன் தோள்களின் வலிமையினில்
செயற்கரிய செயல்களை செய்திட
பொழுதுகள் காத்திருக்க
உன்னைப் புரிந்தவர்களுக்காக
மறுபடியும் நீ மலர்ந்து
அன்பெனும் நறுமணத்தினில்
சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன்