கவிதை - தனிமையில் இனிமையென - கலைச்செல்வி அறிவழகன்
என் காதல் இதயம்
எப்போதும் துடிக்கும்
உனக்காக மட்டும்
அத்தனை நொடிகளும்
காற்றில் மறையும்
பனித்துளிகளாய் கரைந்தாலும்
மெல்லிய மலர்களின் இதழ்களாய்
என் மனது உனக்காக மட்டும்
மீண்டும் மீண்டும் பிறந்து
உனக்காக துடிக்கும்
உன் இனியவளின்
காதல் இதயம்.