கவிதை - உடைந்த இணைப்புகள் - கலைச்செல்வி அறிவழகன்
என் கனவுகளை இணைத்த
உன் காதல் மனதில்
இப்போது நான் இல்லை.
நீ இல்லாத வாழ்க்கையில்
மறுபடியும் ஒரு முறை
சூரியன் உதித்தாலும்
மகிழ்ச்சி ஒளிக்கீற்றுகள்
தடம் மாறியே செல்லும்
என்னிடத்தில் நிச்சயமாய்
வராது என்று நீ அறிவாயா?