கவிதை - பாலமாக நீ - கலைச்செல்வி அறிவழகன்
என் வாழ்க்கையில் கண்ட
கனவுகளுக்கு என்றும்
ஒரு பாலமாக நீ எனக்கு.
என்னுள்ள உணர்வுகளுக்கு
ஒரு வடிகாலாய்
எண்ணங்களால் எனக்குள்
காதல் பாலம் அமைத்தாய்
உன் கண்களால்
என் இயலாமையை
கனிவுடன் மாற்றி அமைத்தாய்.
கனவா இல்லை நனவா
என்று என்னை திகைக்க
வைத்த உனக்கு நான்
என்ன தரவேண்டும்?
சொல்வாயா இனியவனே!