கவிதை - என் இரவுகள்.... - ஜெப மலர்
தென்றல் காற்று
தேகம் தீண்டிட
தனிமையில் நான்
இனிமை கண்டிட
நினைவுகளுக்குள்
நிறைந்திருக்கிறேன்....
மனம் முழுவதும் நிறைந்து
மங்காமல் வலம் வருகிறாய்...
மதி தனிமையில் கலங்கிட்டாலும்
மனம் நினைவில் களிக்கிறது!!
இருளின் ஆதிக்கத்தில்
இமை மூடுகிறேன்
கனவின் ஒளியில்
என்னவனின் முகம் காண்பேன் என்று...
தொடர்கிறது இப்படியே என் இரவுகள்...