கவிதை - புதுமை என்பது... - ஜெப மலர்
தொடுதிரையை தொட்டு தொட்டு பார்த்து விட்டு
மனத்தேவையை விட்டு விடுகிறார்கள்...
முகம் பார்த்து குடும்பத்தோடு விளையாடாமல்
முகநூலில் முகம் அறியாமல் உரையாடுகிறார்கள்...
இலவசமாக ஆனந்தத்தை வாங்காமல்
விலை கொடுத்து தொல்லையை வாங்குகிறார்கள்...
கையில் அடங்கா அலைபேசி
நோட் புக் அடங்கா கைப்பை...
இதுதான் நவீனமா...
இதுதான் புதுமையா...
இல்லை... தேவை இது இல்லை..
எதிரிட்டு வரும் சிக்கலை தீர்க்க
எதிர்க்கும் மன தைரியம்...
தற்காப்பு கலை கற்று
துனிவோடு வலம் வரும் துணிவு...
ஆபத்தை தேடி போகாமல்
ஆனந்தமான வாழ்வு...
எதிர்காலத்தை வளமாக மாற்ற
வழி அறியும் மன பக்குவம்...
வளர்த்து கொள் ஒவ்வொன்றையும்
வளமான வாழ்க்கை அமைய
வாழ்த்துக்கள் உனக்காக...