கவிதை - தேடல் - ஜெப மலர்
கிரங்க வைக்கும் காதலும் நீ
கிடைக்க பெறாத கவிதையும் நீ
ஏக்கம் தரும் நட்சத்திரம் நீ
கண்கள் பேசும் நீர் நீ
கையில் கிடைக்கா பொக்கிஷம் நீ
எக்காலமும் நினைவுகள் நீ
வாழ்வின் வசந்தம் நீ
தவிக்க வைக்கும் கனவும் நீ
தன்னலமில்லா உறவும் நீ
வரமாய் வந்ததும் நீ...
ஆனால்,
காந்தமாய் ஈர்த்து
காத்திருக்க வைத்து மறைந்ததேனோ....
வார்த்தையாய் வடிக்க சொற்களில்லை
வா என்று கெஞ்சுகிறேன்...
நீ இன்றி அமைதியில்லை
நின் முகம் காணாமல் வாழ்வுமில்லை..
காத்திருப்பும் உனக்காக
கனவுகளும் உனக்காக
என் இதயம் துடிக்க
உன் சுவாசம் வேண்டுமே...
என் வழி கண்டிட
உன் விழி வேண்டுமே ...
என் சொல் கவியாக
உன் வார்த்தை வேண்டுமே...
உன் அன்பு நானாக
என்ன தவம் செய்வேன் யான்
மண்டியிட்டு நிற்கிறேன்
மனதில் என்றும் இடம் வேண்டி...