(Reading time: 1 minute)
Love

கவிதை - ஏக்கம் - ஜெப மலர்

நேசமாய் தோள் சாயும் போது

நெஞ்சின் பாரம் பஞ்சாய் போகுதே

உன் அருகாமையில் துயரம் மறந்து

அமைதியை உணருதடா நெஞ்சம்

நேசம் உள்ளத்தில் இருக்கும் போது

தூரம் ஒரு பாரமில்லையே

உன் பாசம் கண்டு பயந்து போகிறேன்

பிரிவின் வலி தாங்க விருப்பமில்லையே

தள்ளியே போகிறேன் உன்னை விட்டு

நேசம் எப்போதும் மனதோடு போதுமே...

ஆயுளுக்கும் இவ்வுறவு பிரியாதிருக்க

ஆண்டவன் அருள் வழங்கட்டும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.