கவிதை - ஓடிடு - ஜெப மலர்
ஓடிக் கொண்டேயிரு
நின்றால் உலகம்
நிம்மதியை பறித்து விடும்
உட்கார்ந்தால் உன்
உருவத்தையே அழித்து விடும்
ஓடும் இலக்கை நீயே தேர்ந்தெடு
பணத்தின் பின்னே ஓடாதே
தனிமரமாகி விடுவாய்
பாசத்தின் பின்னே ஓடாதே
பைத்தியமாகி விடுவாய்
அன்பின் பின்னே ஓடாதே
அடிமையாகி விடுவாய்
எல்லாவற்றிற்கும் எல்லை வகுத்திடு
அளவிற்கு மிஞ்சினால்
அமுதமும் நஞ்சு தான்
புதிய வழியை அமைத்திடு - அது
பெற்ற நாட்டிற்கு நன்மை சேர்க்கட்டும்
உனக்கென்று கொள்கை அமைத்திடு - அது
உறவுக்கு ஆதரவாய் அமையட்டும்
தடைகள் எதிர்த்து வந்தாலும்
தனியாய் தகர்க்க கற்று கொள்...
வாழும் வாழ்க்கை ஒன்றே
வரமாய் பெற்றிட்டாய் நீ அதை
வாழ்ந்து பார்த்து முடித்திடு
வருங்காலத்திற்கு சரித்திரமாய் அமைத்திடு