(Reading time: 1 - 2 minutes)
Love

கவிதை - தவிப்பு - ஜெப மலர்

மனதின் மொழி அறிந்த 

மன்னவனின் உதடுகளே

மெளன மொழி பேசுகையில் 

மரணிக்கிறது இதயம்... 

வார்த்தைகள் கூற முடியாத

வலிகள் நிறைந்த பதிலை

மெளனங்கள் அழகாக பிரதிபலிக்கின்றன... 

மனதினை ரணமாக்க

வார்த்தைகள் தேவையில்லை 

என்னவனின் மெளனமே போதுமானது... 

அறிவுக்கு தெரிகிற பதில் 

மனதிற்கு புரியவில்லை...

பிரிவொன்றை பரிசளித்து விட்டு 

பதில் சொல்லாமல் சென்று விட்டாய்... 

தேடி வருவாய் என்று காத்திருக்கிறேன் 

புயல் தொட்ட மலர் போல... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.