கவிதை - பயணம் - ஜெப மலர்
கண் விழிகளுக்குள் மூடி
கருத்தாய் காத்திட்டேன் உன் அன்பை...
காத்திருக்கும் தவிப்பு புரியாமல்
தட்டி கழித்து செல்கிறாய் நீ...
காதல் மட்டுமே வாழ்க்கை
என்றிருந்தேன் நான்...
உன் ஒதுக்கம் தரும் வேதனை
உலகை விட்டு ஓட தூண்டுகிறது...
ஓய்ந்து போக மாட்டேன் நான்...
காதலை தவிர்த்து காலத்தை ஜெயித்து
கால் தடம் பதிக்க நான் எழுகிறேன்...
வீழ்ந்தது போதும் என
வெற்றி பெற நான் எழுகிறேன்...
அன்பு சிறையிலிருந்து மீண்டு
அமைதி காண தொடருகிறேன் என் பயணத்தை...