கவிதை - மதியோடு மனம் - ஜெப மலர்
அழகை கண்களால் பார்க்காமல்
அன்பால் பார்த்து
நேசிக்கப்பட்டதால்
நெஞ்சம் தஞ்சமடைந்து உன்னில்...
எல்லையில்லா நினைவுகள்
ஓய்வில்லாமல் மனதில் எழுந்து
உன்னை நினைத்து ஏங்கி
உன் நினைவில் கரைகிறது...
முகம் பார்த்த சந்தோஷத்தில்
மனம் உவகை அடைகிறது..
மனதோடு அறிவு போட்டியிட
மன்னவனே! வெற்றி பெறுவது என்னவோ மனது தான்...