கவிதை - வருவாயா? - ஜெப மலர்
நாழிகை கடந்து போகிறது
நானோ நிற்கிறேன் உன் நினைவிலே...
கரம் பிடித்து நடத்திடு
கருத்தாய் கரை சேர்த்திடு
தனித்து நடக்க அறியவில்லை
தயவாய் துணையாய் வந்திடு
உன் கால் தடத்தில்
என் தடம் பதித்து
நடந்தே அறிந்த நான்
தொடுவானில் தொலைந்து நிற்கிறேன்...
என்னவனே வந்திடு....
மொழியின்றி வினவுகிறேன் மனதிடம்
மனம் அறிந்த நீ விடையாய் வந்திடு...