(Reading time: 1 minute)
Love

கவிதை - பள்ளி பருவத்திலே - ஜெப மலர்

மனது தடுமாறுகிறது 

மணித்துளிகள் கரையவில்லை...

விழிகள் மயங்குகிறது

விநாடிகள் சுழலவில்லை... 

நிசப்தம் அதிகரிக்கிறது 

நிமிடங்கள் நகரவில்லை...

பாடம் மனதில் ஏறவில்லை 

பாடவேளை முடியவில்லை 

எண்ணிலடங்கா பெருமூச்சுடன் 

எதிர்பார்ப்புடன் நாங்கள் 

இடைவேளை தேடி

இமைக்க மறந்து காத்திருந்தோம்... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.