கவிதை - பள்ளி பருவத்திலே - ஜெப மலர்
மனது தடுமாறுகிறது
மணித்துளிகள் கரையவில்லை...
விழிகள் மயங்குகிறது
விநாடிகள் சுழலவில்லை...
நிசப்தம் அதிகரிக்கிறது
நிமிடங்கள் நகரவில்லை...
பாடம் மனதில் ஏறவில்லை
பாடவேளை முடியவில்லை
எண்ணிலடங்கா பெருமூச்சுடன்
எதிர்பார்ப்புடன் நாங்கள்
இடைவேளை தேடி
இமைக்க மறந்து காத்திருந்தோம்...