(Reading time: 1 - 2 minutes)
Love

கவிதை - விதியின் வழி - ஜெப மலர்

மன்னவனின் மனதை படிக்க அறியாத நான் 

விதியின் சூத்திரத்தை எப்படி அறிவேன்... 

சில நேரம் நெருங்கி வருகிறாய் காதலாய்... 

பல நேரம் தவிர்த்து செல்கிறாய் அலட்சியமாய்...

நான் விலகி செல்ல எத்தனிக்கும் போது 

நீ அருகில் வந்து குளிர்விக்கிறாய்...

நான் அருகாமைக்கு காத்திருக்கும் போது

கதிரவனாய் விலகி சென்று வருத்துகிறாய்... 

என்னவென்று நான் நினைப்பது?

இது தான் விதியின் விளையாட்டோ !!!

விலகவும் முடியாமல் நெருங்கவும் முடியாமல்

தவித்து போய் நிற்கும் மனதை

புகைப்படம் எடுத்து காட்டிட வேண்டுமோ... 

இதயத்தையே புகைப்படமாக்கி தந்திட வேண்டுமோ?

மெளன மொழியில் பேசி கண்களில் விடை கூறாதே... 

வார்த்தையில் விடை கூறி கண்களுக்குள் மறைத்திடு என்னை... 

விதியை மதியால் வெல்ல முடியுமா என்பதை நான் அறியேன்...

மதியை என் மனதால் வென்றிடுவேன் என காத்திருக்கிறேன்.... 

விதி மீது பழி கூறி நகர்ந்து விடாதே

மதியால் விடை கூறி விடு என் அன்பே.... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.