கவிதை - திருமண நாள் வாழ்த்துக்கள் - ஜெப மலர்
காதல் என்ற வார்த்தைக்கு
இலக்கணம் அமைத்த என்னுயிரே...
இந்நாளில் தான் என்
வாழ்க்கைக்கு அர்த்தமாக வந்தாய் நீ...
இந்த மணித்துளிகளில் தான்
நீ என்னில் சரிபாதியானாய்...
உன்னோடு இணைந்த இந்த பந்தம்
உயிருள்ள வரை தொடரட்டும்...
என்றென்றும் உன் திகட்டாத அன்பில்
இனிதாய் நான் வாழ்ந்திடுவேன்!!!