(Reading time: 1 - 2 minutes)

கவிதை - இன்று புதிதாய் பிறந்தோம் - ஜெப மலர்

தாழ்மை வெறுமையின் அடையாளம் அல்ல..
எளிமை ஏழ்மையின் புகழிடம் அல்ல..
பொறுமை பலவீனத்தின் சின்னம் அல்ல..
வாய்மை பயத்தினால் வருவதும் அல்ல..
இல்லாமை என்றும் நிரந்தரமும் அல்ல..
பெருமை உயர்வை தருவதும் அல்ல..

இல்லாமையும் கல்லாமையும் இவ்வுலகில்
கயமையையும் பொறாமையையும் புகுத்தி விட்டது...
இயலாமையும் பெருமையும் நம்மை தாழ்ப்படுத்தி விட்டது...
தாழ்மையே தலைகுனிந்து தூக்கி விடுகிறது...


கல்லாமையை இல்லாமையாக்கி
இயலாமை முயலாமையை அழித்து
உண்மையை சொத்தாக கொண்டு
முயற்சியை மூலதனமாக்கி
உயர்வை லாபமாக பெற்று
புதிய சரித்திரம் படைக்க
இன்று புதிதாய் பிறந்தோம்....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.