கவிதை - துணையாய்... - ஜெப மலர்
கவலைகள் ஆழி போல சூழ்ந்து கொள்ள
விழித்திரையில் நீர் திவலைகள் திரள
குரல்வளையில் ஒலி வெளிவர மறுக்க
மூச்சுக்குழல் இயங்க தடுமாற
இதயத்தை பாரங்கள் அழுத்த
உலகமே மறைந்து போனதாய் தோன்ற
சொல்லொண்ணா வேதனையில் மனம் திகைக்க....
தலைசாய்க்க தோள் தந்து
கைகளின் மேல் நம்பிக்கையாய்
அவன் விரல்கள் அழுத்த....
படிந்திருந்த கவலை ரேகைகள் காற்றோடு கலக்க
வேதனைகள் வெடிபொருளாய் சிதற
துன்பங்கள் நிரந்தரமாய் துயில் கொள்ள
நிம்மதியின் சாயல் நெஞ்சில் படிய
உயிரோடு புத்துணர்வு தோன்ற
உலகையே வலம் வரும் துணிவு பெற்று
புதிய பாதையில் பயணிக்கிறேன்
தந்தையின் பாசம் உணர்த்திய
தோழனின் விரல் பிடித்து
நட்பின் அடையாளமாய்...