கவிதை - மறுபடியும் - ஜெப மலர்
அன்று...
ஆற்றுமணலில் நான் படைத்த
அழகிய உருவங்கள்
கொத்தனின் கருவியால்
சிதைக்கப்பட்டு வீடு
காரமாளிகையாக உருப்பெற்று சிரிக்கையில்
கண்கள் நீரை சொரிந்தது வருத்தத்தில் ...
இன்று...
என் குழந்தைகளோடு
அலாதி ஆர்வத்தோடு
சிதைக்கப்படும் என்று தெரிந்தும்
உருவாக்கும் ஒவ்வொரு உருவங்களும்
பழைய நினைவுகளை மீண்டும் தருகையில்
கண்கள் நீரை சொரிகிறது மகிழ்ச்சியில்...