கவிதை - அழிப்பது எதை? - ஜெப மலர்
இயற்கை தாயின் மடியில் தவழ்ந்து
இணையில்லா மகிழ்ச்சியோடு இதழ் பரப்பி
தான் மட்டுமே வாழ விரும்பாமல்
தன்னை அழிக்க துடிக்கும் மனிதனின்
தாகம் தீர்க்க நீர் தர துடிப்பதோடு
உயிர் வாழ வளியையும் அளிக்க விழைகிறான்...
துன்பம் துடைக்க தோள் கொடுத்தவனின்
தோழமையை வெட்டி வீழ்த்தி
அழித்து விட்ட உவகையில் சிரிக்கிறான்
தான் அழிவதை அறியாமல்....
இனியேனும் உணருவானா?
சுவாசிக்க உதவியவனை நினைப்பானா?
அழிந்து போவது அவன் மட்டுமல்ல...
தன் சந்ததியும் தான் என்ற உண்மையை???