கவிதை - ஆசான்கள் ஒவ்வொருவருக்கும்... - ஜெப மலர்
கடந்து போக வேண்டிய பாதையை
கருத்தாய் கற்று தர எண்ணி
சிரத்தை மேற்கொண்டு கற்பித்து
சிந்தையில் இருத்த முயலும் வழியில்
பின்பற்ற இயலாதவர்களாய் சிலர்
பின்தங்கி நிற்கையிலே
அவர்களை ஓரங்கட்டிவிட்டு முன்னேறாமல்
மணித்துளிகளை ஒதுக்கி
மனதின் சுமைகளை அறிந்து
பாரங்களை அகற்ற வழி அமைத்து
பக்குவமாய் பண்படுத்தி
திடமனதோடு தொடர்ந்து முன்னேற
திட்டம் அமைத்து கற்று தந்து
கல்வியின் ஒளியில் ஒவ்வொருவரும்
ஒளிர்ந்து பிரகாசித்திட உதவிய
ஆசான்கள் ஒவ்வொருவருக்கும்
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்....