கவிதை - வருந்துகிறேன் உனக்காக... - ஜெப மலர்
பச்சை குடை விரித்த நிழலிலே
படுத்துறங்கி இனிமை கண்டாய் நீ....
பழுத்து தொங்கும் கனிகளை
பறித்து தின்று பசியாறினாய் நீ...
பாடும் பறவைகளின் இன்னிசை கேட்டு
பாரம் தொலைத்தாய் நீ...
மலர் விரியும் அழகு கண்டு
மனம் மயங்கி மகிழ்ந்தாய் நீ..
உண்ண கனி கொடுத்து
உறங்க இடம் தந்து
சோர்வு நீங்க வளி தந்து
சோகம் மறக்க தென்றல் வீசி
அடைக்கலத்தோடு ஆரோக்கியமும்
அள்ளி வழங்கிய என்னை
ஆகாதவனென்று எண்ணி
அடித்து துவைத்து வெட்டி விட்டு
இழந்து போன என்னை பெற
மாற்று வழி பல தேடியும்
உண்மையை உயிர் பெற செய்ய மறுத்து
பொய்யை முளைப்பிக்க திட்டம் தீட்டுகிறாயே...
பிளாஸ்டிக் குடை செய்து
பரிதாபமாக விசிறி கொள்கிறாயே...
பரிதபிக்கிறேன் உன் நிலை கண்டு மானிடனே