கவிதை - இதுவும் உன் கடமையே - ஜெப மலர்
சோறு போடும் உழவனின் கால்
சேற்று வயலில் இறங்க மறுத்தால்
சாய்வு நாற்காலியில் அமரும் நாம்
சாதம் தேடி இறங்க வேண்டும் நடுத்தெருவில்...
உணவில் கை நுழைக்கும் முன்
உழவனுக்காக கை ஏந்திடு இறைவனிடம்...
கேளிக்கை களியாட்டம் மது மாதின்றி
கேடில்லாமல் வாழ்ந்திடலாம்...
உண்ண உணவின்றி
உன்னால் வாழ்ந்திட முடியுமா?
படைத்தவன் படைத்திட்டான்
காத்திட உழவன் வேண்டுமே..
உழவனின் வேர்வைத்துளி
உடம்பின் இரத்த துளியாய்
உன் வாழ்வில் ஒரு அங்கமாய்
ஊடுருவி பாய்கிறதே...
பிறப்பிற்கு காரணமான
பெற்றோரை காப்பது கடமை போல
உயிரோடு கலந்து இருக்கும்
உழவனை காப்பதும் கடமையல்லவா....