கவிதை - உன்னோடு வர ஆசை - ப்ரியசகி
உன் பாதம் தொட்டு விட்டு ஓடி மறையும் கடல்
அலையாக இருக்க விருப்பமில்லை துளியும்...
உன் பாதம் முழுவதுமாக என்னுள் புதைய,
உனைத் தொட்டு உதிர மறுக்கும் கடல் மணலாக
நீ இந்த வாழ்வெனும் கடல் கடந்து கரை கடக்கும் வரை
உன் பாதத்தோடு ஒட்டி உன்னோடு வர ஆசை..!!