கவிதை - சிறு பார்வை - ப்ரியசகி
இனம் புரியாத மகிழ்ச்சியையும்
இதழோர குறுஞ்சிரிப்பையும்
கண்களில் மின்னும் மின்மினிகளையும்
கன்னங்களில் புதுப் பொலிவையும்
யாரும் கண்டிராத தார்மீக வெட்கத்தையும்
இமைப்பொழுதில் என் வதனத்தில் மலரச்செய்ய
ரகசியமான உன் சிறு பார்வை மட்டுமே போதுமானது..!!