கவிதை - மழையே! மழையே! - ப்ரியசகி
மெதுவாய் மெதுவாய் வருவாய்
எனையே எனையே நனைப்பாய்...
இதழில் இதழில் விழுந்து
தேனாய் தேனாய் ருசிப்பாய்...
சரமாய் சரமாய் பொழிவாய்
சாபம் சாபம் தீராய்...
காணாய் காணாய் கண்ணே
கண்டே கண்டே மகிழ்வாய்...
வரமாய் வரமாய் வாராய்
எந்தன் மழையே! மழையே!