கவிதை - பெண் பார்க்கும் படலம்! - ப்ரியசகி
(அனைவருக்கும் அல்ல)
வந்தான் கண்டான் சென்றான்..
வந்ததும் என்னைத் தேடி அல்ல..
கருத்தாய் கண்டதும் என்னை அல்ல..
வந்தது - பொன்னை தேடி..
கண்டது - அவனை விலை பேச, எந்தை
இராப்பகலாய் சேமித்த பணத்தை...
சென்றது - சேமிப்பு போதவில்லை என்று...
இதில் நிதர்சனம் என்னவென்றால்
அவன் கண்கள் எனை தீண்டவுமில்லை
எனது பண்பை பார்க்கவுமில்லை...
இதற்கு பெயர் பெண் பார்க்கும் படலமாம்..
இன்றும் கதவருகே காத்திருக்கிறேன்
புது வரவை எதிர்பார்த்து...