கவிதை - தவறு! - ப்ரியசகி
அடுப்படியில் இருந்து வெளிவந்தது தவறு,
பகுத்தறிவை வளர்த்துக் கொண்டது தவறு,
உலகம் உணரத் துவங்கியது தவறு,
தன்னால் முடியுமென உலகிற்கு
உணர்த்தியது தவறு,
மாலையில் வீடு விட்டு வெளி சென்றது தவறு,
இரவில் பயணம் மேற்கொண்டது தவறு,
பிடித்த உடை அணிந்தது தவறு,
துணையாய் யாரையும் அழைத்துச்
செல்லாதது தவறு,
முழுதாய் நம்பிக்கை வைத்தது தவறு,
மனம் விரும்பிய ஒருவரை தடைகள் பல
கடந்து மணக்க நினைத்தது தவறு,
பெண்மை தலை நிமிர்ந்தது தவறு,
சற்றே சிரித்து பேசிவிட்டால் தவறு,
தவறு! தவறு! தவறு!
பெண்மையை பயத்தோடும்
பரிதவிப்போடும் வலம் வர வைத்துவிட்ட
சமுதாயம் என்றேனும் மாறுமோ? இல்லை
அனைத்தும் பெண்மையின் தவறென
உரைக்கும் சமூகம் நாளை பெண்ணாய்
பிறப்பதும் தவறென உரைத்திடுமோ?