கவிதை - அன்புள்ள அம்மா - கார்த்திக் கவிஸ்ரீ
நான் கருவுற்ற போது எப்படி இருப்பேன் என்பது கூட தெரியாமல் என்மேல் உயிரை வைத்தவள்,
ரத்தமும் சதையுமாய் தன்னையே எனக்கு பிரித்து தந்தவள்,
நான் உயிரோடு பூமிக்கு வர தன் உயிரை பணையம் வைத்தவள்,
என் பசிபோக்க தன் பசி மறந்தவள்,
உன்சேலையே எனக்கு பூஞ்சோலை ஆனது,
பாடும் தாலாட்டில் சங்கீதம் கண்டேன்,
ஊர் கண் எல்லாம் என்மீது உள்ளது என்று சுற்றிப்போடுவாய்,
ஆனால் ஒருநாளும் உன்னைப்பற்றி நினைத்திருக்க மாட்டாய்,
கவிதையாய் வர்ணிக்க முடியாத காவியம் நீ,
கண்ணெதிரே கண்ட செய்வமும் நீ,
உன் உயிருள்ள காலம் வரை என் உயிரை கொண்டு காப்பேன் அம்மா,,.