(Reading time: 1 - 2 minutes)

கவிதை - காதல் கவிதை - இரா.இராம்கி

இன்று, என் கருவானமெங்கும் வெண்மீன்கள்;

என் நதியில் துள்ளிக்குதித்தோடும் விண்மீன்கள்;

இந்த மாயம் செய்தது நீதானடி  

இனி என் வாழ்வு உனதோடு தானடி;

 

ஓயாமல் என் மனதோடு வாயாடும் உன் தேன்மொழிகள்

சாயாமல், நான் கண்டு ரசிக்கும் உன் மோகவிழிகள்;

 

என் தேகமெல்லாம் காதல் மேகங்கள்

உன்னில் வந்து மழையாய் விழ, என்னில் எழுந்த ஏக்கங்கள்;

 

தும்பைப்பூக்களை தூவிய உனது சிரிப்புகள்

நம் தூய நேசத்தில்

துளிர்விட்ட காதல்செடிகள்

 

என் உள்ளத்தில் உன் எண்ண அலைகள்

என் உடலில் உனை சேரத் துடிக்கும் ஹார்மோன் மலைகள்

 

பாரெல்லாம் உண்டு பல நூறு நற்சிலைகள்;

ஆனால்,பார்த்தவுடன் மனம் பறிக்கும் உன் மாய கலைகள்;

 

என் விழி கொஞ்சும் விண்மீனே, உனை என் வசம் சேர்க்கும் வசந்த வலைகள்

என் உள்ளம் தொட்ட  பெண்மீனே,

உன் ஸ்பரிசத்தில் வான் முட்டும் என் தலைகள்

 

இன்று என் கருவானமெங்கும் வெண்மீன்கள்;

என் நதியில் துள்ளிக்குதித்தோடும் விண்மீன்கள்;

இந்த மாயம் செய்தது நீதானடி  

இனி என் வாழ்வு உனதோடு தானடி

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.