கவிதை - காதல் கவிதை - இரா.இராம்கி
இன்று, என் கருவானமெங்கும் வெண்மீன்கள்;
என் நதியில் துள்ளிக்குதித்தோடும் விண்மீன்கள்;
இந்த மாயம் செய்தது நீதானடி
இனி என் வாழ்வு உனதோடு தானடி;
ஓயாமல் என் மனதோடு வாயாடும் உன் தேன்மொழிகள்
சாயாமல், நான் கண்டு ரசிக்கும் உன் மோகவிழிகள்;
என் தேகமெல்லாம் காதல் மேகங்கள்
உன்னில் வந்து மழையாய் விழ, என்னில் எழுந்த ஏக்கங்கள்;
தும்பைப்பூக்களை தூவிய உனது சிரிப்புகள்
நம் தூய நேசத்தில்
துளிர்விட்ட காதல்செடிகள்
என் உள்ளத்தில் உன் எண்ண அலைகள்
என் உடலில் உனை சேரத் துடிக்கும் ஹார்மோன் மலைகள்
பாரெல்லாம் உண்டு பல நூறு நற்சிலைகள்;
ஆனால்,பார்த்தவுடன் மனம் பறிக்கும் உன் மாய கலைகள்;
என் விழி கொஞ்சும் விண்மீனே, உனை என் வசம் சேர்க்கும் வசந்த வலைகள்
என் உள்ளம் தொட்ட பெண்மீனே,
உன் ஸ்பரிசத்தில் வான் முட்டும் என் தலைகள்
இன்று என் கருவானமெங்கும் வெண்மீன்கள்;
என் நதியில் துள்ளிக்குதித்தோடும் விண்மீன்கள்;
இந்த மாயம் செய்தது நீதானடி
இனி என் வாழ்வு உனதோடு தானடி