(Reading time: 1 - 2 minutes)

கவிதை - போதும் விட்டுவிடு எங்களை!! - இரா.இராம்கி

கண் கொட்டும் விண்மீன்கள்

நம்மைப் பார்த்து

கண்ணடித்து பரிகாசம் செய்கிறது;

 

தென்றலுக்கு தலையாட்டும் தென்னங்கீற்றுகள் 

எள்ளி நகையாடுகிறது;

 

சுதந்திரமாய் உலா வரும் தெரு நாய்கள்,

மூடிய ஒன்றிரண்டு முகங்ளை 

கண்டு குரைக்காமல் 

பரிதாபப்படுகிறது

 

புழுக்களும் பூச்சிகளும்,

என்னில் சிறிய கிருமிக்கு அஞ்சி 

அடங்கி நிற்கிறாயே என்று நகைக்கிறது;

 

இயற்கைத் தாயே!

அடக்கமின்றி அச்சமின்றி

ஆணவம் கொண்டோம்;

 

தயக்கமின்றி

தயவுமின்றி

நின்னை அழித்தோம்;

 

இச்சைக் கொண்டு

இரக்கமின்றி நின்னை இம்சித்தோம்;

 

மயக்கம் கொண்டு

மாய வலையில் விழுந்தோம்

 

தாயே! துடிக்கிறது இங்கு பல நெஞ்சம்;

தயைக் காட்டு நீ

கொஞ்சம்;

 

போதும் விட்டு விடு,

எங்களை;

உணர்ந்தோம் உணர்வூப்பூர்வமாக,

இனி உள்ளார்ந்த அன்புடன் எல்லா உயிர்களையும் நேசிப்போம்;

 

இனி வாழ்வோம், நாளும் இயற்கையோடு இயைந்து!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.