(Reading time: 1 minute)

கவிதை - இறுதி வரை - அம்பிகா

இரவு நேர வானம் பார்த்த படி,

ஈர மணலில் கால் புதைக்க வேண்டும்!

இயல்பாய் நீ என் தோள் சாய வேண்டும்,

இரவில்  என் கை தேடி நீ கை கோர்க்க வேண்டும்!

எனக்கே எனக்காய் எப்போதும் நீ வேண்டும்,

உன் தேடலின் முடிவாய் என்றும் நானே இருக்க வேண்டும்!!

நாம் கடந்து வந்த  வருடங்கள், உன் நினைவில் இனிக்க வேண்டும்,

இறுதி வரை இணையாக நாம் இறுகி இருக்க வேண்டும்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.