காதலர் தின சிறப்பு கவிதை - அழகு! - அம்பிகா
உலகம் அழகானது தான்....
கதை பேசும் உன் கண்கள்,
கோபத்தில் சிவக்கும் உன் மூக்கு நுனி,
வெட்கத்தில் சிவக்கும் உன் கன்னங்கள்,
இதழ் சிந்தும் மரகத புன்னகை,
உன் உதட்டோர மச்சம்,
யோசிக்கையில் சுருங்கும் உன் முன் நெற்றி,
நெற்றியில் விழும் முடியை கோதி விடும் உன் விரல் நுனிகள்,
அந்த நொடி செல்லமாய் சிணுங்கும் உன் வளையல்கள்,
கால்களில் கொஞ்சும் தங்க கொலுசு,
நீ தாண்டிச் செல்லுகையில் என்னோடு ஒட்டிக்கொள்ளும் உன் வாசனை,
ரசிக்க இத்தனை இருக்கையில், உலகம் அழகானது தான்!!