கவிதை - பொங்கலோ பொங்கல் - கார்திகா.ஜெ
காரிருள் மூடிய பனி
கதிரவன் ஒளிக்கீற்றால் விளகி
தமிழ்திருநாளாம் தை அன்று
வாடையில் உதித்த மணியை
கருதருத்து..
முற்றம் எங்கும் மஞ்சள் நீராடி
வண்ணமயமாய் கோலமிட்டு
உடுத்திடா ஆடை எனதாகுமோ
ஏங்கி நின்ற புது பானையில்
மணியாம் அரிசியையும்
தங்கமாய் வெல்லமும்
திகட்டாத சுவையோடு பாகாய் இனிக்கும் கரும்போடு
நுரை பொங்க பொங்கலோ பொங்கலோ .... என்ற ஆர்பரித்து
எம் உதிரனாம் காளையை புறம்
விட்டு
வீரத்தை ரசிக்க ஒருநாள் போதுமோ
காணும் நேரம் சுற்றத்தோடு கழியும் மூன்றாம் நாள்....
இவை அனைத்தும் ஏக்கங்களாய்
இரயிலின் சன்னல் வழியே முன்னோக்கிய பயணங்களோடு
பின்னோக்கிய நினைவுகள்.......