கவிதை - முதல் முத்தம் - கார்திகா.ஜெ
உருவம் தரித்தாய் கருவில்
உள்ளம் தரித்தாய் சொல்லில்
சேயானாய் நெஞ்சில்
அசைவுகள் கொண்ட உருவம்
அடியெடுத்து நடைபழகிய சில நிமிடம்
மார்போடு அள்ளி அனைத்து
சின்னஞ்சிறு கைகளைத் தீண்டி
தாண்டவம் ஆடும் கால்களை தொட்டு
மரணம் நீங்கிய புண்ணகையோடு
மெய்பொருளாய் நீ ...
என் கையில்
முத்தான இதழ் பதித்த முதல் முத்தம் நீ விழி திறக்க...