(Reading time: 1 minute)

கவிதை - உறங்காமல் போன இரவுகள் - இந்துமதி

கல்லூரி காலங்களில்

ஒருவரும் அறியாமல் நீ கொடுத்த கைபேசியை

தலையணை அடியில் மறைத்து

உன் அழைப்பிற்காக காத்திருந்து

உறங்காமல் போன இரவுகளை எல்லாம் மறந்து உறங்குகிறேன்

நீ என் அருகில் உறங்குவதைக் காண்கையில்... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.