கவிதை - நீயின்றி - கோகுலப்ரியா
நீயின்றி தவிக்கிறேன்
என் கண்ணீர் துளிகளை துடைக்க
யாரும் இல்லாததால்
நீயின்றி தவிக்கிறேன்
தோளில் சாய்ந்து மடியில் படுத்து
என் மன பாரங்களை இறக்கி வைக்க
யாரும் இல்லாததால்
நீயின்றி தவிக்கிறேன்
கலங்காதே என் கண்ணே
நான் இருக்கிறேன் என்று ஆறுதல் படுத்த
யாரும் இல்லாததால்
என் வாழ்வை கடக்கும்
ஓவ்வொரு நொடியும்
நீயின்றி தவிக்கிறேன் அம்மா
என் செல்ல அம்மா!!!