கவிதை - என் செல்ல நாய்க்குட்டி - கோகுலப்ரியா
என் குடும்பத்தின் அங்கமாய்
இருக்கும் உன்னை - யான்
எவ்வுறவில் காண்பது!!
பாசத்தில் ஓர் அன்னையாய்
பாதுகாப்பில் ஓர் தந்தையாய்,
குறும்புத் தம்பியாய்
சொல் பேச்சு கேட்கும் தோழனாய்
சில சமயங்களில் பசிக்கு அழும் குழந்தையாய்
எத்தனை உறவுகளின்
பிம்பமாய் இருக்கின்றாய்!!
இரு கால்கள் கொண்ட மனிதன்ற்கு
ஒரு முகத்தில் பல கள்ள உணர்வுகள்
நான்கு கால்கள் கொண்ட உனக்கோ
ஒரு முகத்தில் பல பாசமிகு உணர்வுகள்
உன் மௌன பாஷைக்கு தான்
எத்துனை எத்துனை பொருள்கள்
ஊட்டிய ஒரு வேளை உணவிற்கு
நீ உன் குடும்பத்திற்கு காட்டும் நன்றிகள்
இந்த ஜென்மத்தில் சொல்லி மாளாது
வள்ளுவன் தந்த “செய் நன்றியறிதல்” குறலுக்கு
உயிருள்ள உவமையடா நீ!!!