(Reading time: 1 minute)

கவிதை - மறதி - கோகுலப்ரியா

உறங்க மனமில்லை

என் நினைவில் நீ

விழிக்கவும் மனமில்லை

என் கனவில் நீ

உன்னை மறக்க நினைக்கும்

ஒரு ஒரு நொடியும் 

மறந்து போகிறேன் 

உன்னை மறப்பதற்கு

என் இறப்பிலும் உன்னை மறவேன்

காரணம் நீ என் உயிர்மூச்சோடல்ல 

என் ஆன்மாவோடு கலந்துள்ளாய்

நான் இறந்தபின்னும்

என் நினைவுகளின் பிம்பமாய்

என்றுமே நீ இருப்பாய்!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.