(Reading time: 1 minute)

கவிதை - கை - கோகுலப்ரியா

விநாயக பெருமானிடம்   உள்ளது

"தும்பிக்கை"

அவன்பால் கொண்ட பக்தியால் கிடைத்தது

"நம்பிக்கை"

அதன் பலனாய் என்னுள் வளர்ந்தது

 "தன்நம்பிக்கை"

அதனால் எதிலும் எனக்கில்லை

"அவநம்பிக்கை"

 

பறவைகளுக்கு இறக்கைபலம்

மனிதர்களுக்கு இயற்கைபலம்

கையின்றி எதுவும் இல்லை

அதன் வெளிப்பாடாய் உரைக்கிறேன்

"நம் வாழ்க்கைக்கு

நம் கையே நமக்கு உதவி" 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.