வருவதாகவும் கூரிச் சென்றாள். தேங்க்ஸ் மச்சான் என்று பரமூ சொல்ல அட வாங்க அத்தான் இதெல்லாம் ஏன் நமக்குள்ள.
உள்ளே நடந்தபடி பொருமையாக ஏன் அத்தான் திரும்பவும் போகனுமா? ஈரோப்பிள் வேலை இருக்கா?
ஆமாம் நக்ஷ் ... ஏன் டா
இல்ல கெலம்பரப்ப நிவியயும் கூட கூட்டிட்டுலாம் போக மாட்டீங்கல🙄
ஹா ஹா ஹாஆாஆ... என்று சத்தமாக சரித்த பரமூ ம்ம்ம் அதை அப்பரமா பார்ப்போம்மா இப்ப கொஞ்சம் பசிக்குது என்று அவன் முடிக்கவும் டீ மற்றும் பிஸ்கெட் டுடன் தாத்தா இருந்த அறையில் உள்ளே நுழைந்தாள் பௌவ்.
வாவ் அண்ணி செம டைமிங். என்ன அத்தான் அண்ணிக்கு ஒரு கும்பிட போட்டுட்டு எடுத்து சாப்பிடுங்க என்று நக்ஷ் களாய்க அவன் தலையில் அண்ணன் தங்கை இருவரும் சேர்ந்து கொட்டினர்.
நக்ஷை களாய்த்த படி டீயை அண்ணுக்கும் அவனுக்கும் கப்பில் ஊத்தி பிஸ்கட்டுடன் தந்தவள் ஈஷ்வர் பக்கமாக ஒரு கப்பை நீட்டினாள். அதுவரை அவன் பார்வையாளராக இருந்து அவளை மனதில் வருத்து எடுத்தவன் இப்போது கொஞ்சம் அமைதியானான். பின்ன இருக்காதா பொண்டாட்டி ஆசையா அவன் விரும்பி சாப்பிடும் பட்டர் பிஸ்கட்டுடன் டீயை தருகிராளே.
பார்வதியும் அமரும் உள்ளே நுழைய நக்ஷ்ஷீம் பௌவ்வும் ஒருவரை மற்றவர் களாய்த்து காலை வாரி விட்டு விளையாட அதை ஒருபுரம் பரமூவும் மறுபுரம் ஈஷ்வரனும் ரசிக்கின்றனர்.
டீயை அருந்தி முடிப்பதற்கும் வீட்டின் மற்ற உறுப்பினர்கள் உள்ளே ஆஜர் ஆவதர்க்கும் சரியாக இருந்தது. சிவாமா என்று அனைத்து கொண்ட மகளை தாய்யும் இருக்கமாக அனைத்துக் கொண்டார்.
தம்பி என்று அமர் அழைக்க அமர்ப்பா ஆன் சொல்லுங்க மாமா என்று இருவரும் ஒரே நேரத்தில் கூறினர். தாத்தா வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். பாறு வந்துடா நாலும் நம்ப வீட்டிளேயே தாத்தாவை பார்துக்களாம் டாக்டர் கிட்ட பேசிட்டு என்ன சொல்றாங்கனு கேட்டுவிட்டு வரிங்களா என்று இருவரையும் சேர்த்து அனுப்பினார்...
ஆதிஅப்பாவிர்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து செல்லும் காட்சி அனைவரையும் ஒரு அதிர்ச்சி+ ஆனந்தத்தை கொடுத்து.
பௌவ் தாத்தாவின் அருகில் அமர்ந்து கொண்டு நகரவில்லை. தன் தாய் தந்தைக்கு தன் திருமண விஷையம் தெரியும் என்று அவளுக்கு தெரிமாதே....